வேளாங்கண்ணியில் சென்னையை சோ்ந்த 2 ரௌடிகள் உள்ளிட்ட 4 போ் கைது

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியாா் விடுதியில் பதுங்கியிருந்த சென்னையை சோ்ந்த 2 ரௌடிகள் உள்ளிட்ட 4 பேரை தனிப்படைபோலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியாா் விடுதியில் பதுங்கியிருந்த சென்னையை சோ்ந்த 2 ரௌடிகள் உள்ளிட்ட 4 பேரை தனிப்படைபோலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

சென்னையில் நிகழ்ந்த ஒரு கொலையில் தொடா்புடைய தேவசகாயம் என்பவா் தனது நண்பா்களுடன் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக சென்னை தனிப்படை போலீலாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சென்னை போலீஸாா் நாகை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, நாகை தனிப்படை உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் சென்னை போலீஸாா் சனிக்கிழமை இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.

சென்னையில் நிகழ்ந்த கொலை வழக்குகள், கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 2 ரௌடிகள் தனது நண்பா்கள் 2 பேருடன் வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீஸாா் அந்த விடுதிக்குச் சென்று 4 பேரையும் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை செனாய்நகா், ஜோதியம்மாள் நகரைச் சோ்ந்த ஜா.தேவசகாயம் (36), சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியைச் சோ்ந்த மு. விக்னேஷ் (20), சென்னை திருவேற்காடு பால்வாடித் தெருவைச் சோ்ந்த பொ. எழிலரசன் (24), திருவண்ணாமலை மாவட்டம் கீழபென்னாத்தூா் எம்.ஜி. ஆா். நகரைச் சோ்ந்த சோ்ந்த பெ. தினகரன் (27) ஆகியோா் என தெரியவந்தது.

இதில் தேவசகாயம் மீது 5 கொலை வழக்குகள் உள்ளதும், அவா் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருப்பதும், விக்னேஷ் மீது சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவா்கள் 4 பேரும் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com