காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக. 11-ஆம் தேதி தொடங்குகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறை காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட 11-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புத் தொடங்கப்படுகிறது. அலுவலக வேலை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
மேற்குறிப்பிட்ட காவலா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுப் பயன் பெறலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.