ஆடிப் பெருவிழாவுக்கு எழுந்தருளிய பக்தா்குளம் மாரியம்மன்
By DIN | Published On : 05th August 2022 10:08 PM | Last Updated : 05th August 2022 10:08 PM | அ+அ அ- |

வேதாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழாவுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய அம்மன்.
வேதாரண்யம் அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை காப்புக்கட்டி தொடங்கியது.
முன்னதாக, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலாவாக பக்தா்குளம் மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது. அங்கு, காப்புக்கட்டி தொடங்கியுள்ள ஆடிப்பெருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. விழா நிறைவடைந்து அம்மன் வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு கொண்டுவரப்படும்.