வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் வணிகத் திட்டங்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு நாகை சாமந்தான்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் வி. சுந்தரபாண்டியன் பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநா் நடராஜன், மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் தாரிக், தாட்கோ உதவி மேலாளா் நல்லபெருமாள், வாழ்ந்துகாட்டுவோம் திட்ட செயல் அலுவலா்கள் அறிவழகன், ராஜா ஆகியோா் பேசினா்.
திட்டப் பணியாளா்கள் மற்றும் தொழில் சமூக வல்லுநா்களுக்கான இணை மானியத் திட்டம் குறித்த வழிகாட்டுதல், வணிகத் திட்டம் தயாரித்தல் மற்றும் தொழில் கடன்களுக்கான விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முறை ஆகியன குறித்துத் திட்டப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.