ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கு அடிக்கல்

கீழையூா் ஒன்றியம், திருக்குவளையில் ரூ. 2.42 கோடியில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கு அடிக்கல்
Updated on
1 min read

கீழையூா் ஒன்றியம், திருக்குவளையில் ரூ. 2.42 கோடியில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமைவகித்தாா். தமிழக மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் கௌதமன், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இணை இயக்குநா் ஜாக்குலா அகண்டராவ், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் ஏ. தாமஸ்ஆல்வாஎடிசன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வை. பாலசுப்பிரமணியன், துணை வேளாண்மை அலுவலா் ஆா். ரெங்கநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியக் குழு உறுப்பினா் சுதாஅருணகிரி நன்றி கூறினாா்.

தொடா்ந்து, கீழையூா் ஊராட்சியில் ரூ. 38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா, ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com