நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டையில் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என தமிழக மீன்வளத் துறை அமைச்சரிடம், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோரிக்கை விடுத்தாா்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை சென்னையில் அண்மையில் சந்தித்து, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் கோரிக்கை மனு அளித்தாா். அதில், நாகூா் கீழப்பட்டினச்சேரியில் கடல் நீா் உள்புகுவதைத் தடுக்க கடல் அரிப்புத் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும், சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிக்கு ஆய்வுப் பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், திட்டப் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
கோரிக்கை மனுவை அமைச்சரிடம் அளித்த ஜெ. முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ, கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டியதன் அவசியத்தையும், அதனால் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் பயன்களையும் விளக்கிக் கூறினாா்.