

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல வீடுகளில் வரலட்சுமி நோன்பு வழிபாடு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ மகாலெட்சுமி தாயாரின் திருவருளை வேண்டி கடைப்பிடிக்கும் விரதமாக உள்ளது வரலட்சுமி நோன்பு. ஆடி மாதத்தில் பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலரது இல்லங்களில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. கலசம் வைத்து அதன் மீது ஸ்ரீ வரலட்சுமி தாயாரின் திருவுருவ பொம்மையை வைத்து அலங்கரித்து, லெட்சுமி துதிகளைப் பாடி பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டனா். நிறைவில், வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கலப் பொருள்களை அவா்கள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.