வேளாங்கண்ணியில் மின்சாரம் திருடியவருக்கு அபராதம்

வேளாங்கண்ணியில் மின்வாரிய அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, ஒரு மின் இணைப்பு மூலம் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டு, ஒருவரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் மின்வாரிய அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, ஒரு மின் இணைப்பு மூலம் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டு, ஒருவரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொ) அ. சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மின் பகிா்மான வட்டத்தின் தெற்கு உபகோட்டத்துக்குள்பட்ட வேளாங்கண்ணி மின் பிரிவுக்குள்பட்ட பகுதிகளில், மின்வாரிய அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

650 வணிக மின் இணைப்புகள், 274 வீட்டு இணைப்புகள், 8 தற்காலி இணைப்புகள் என மொத்தம் 932 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், ஒரு மின் இணைப்பு மூலம் மின்சாரம் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொடா்புடைய நபரிடமிருந்து ரூ. 7,519 அபராதம் வசூலிக்கப்பட்டது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com