உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவிடத்தில் நள்ளிரவில் கொடியேற்றிக் கொண்டாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் உள்ளிட்டோா்.
கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் குருகுலம் நிா்வாக அறங்காவலரும், தியாகி சா்தாா் அ. வேதரத்தினத்தின் பேரனுமான அ. வேதரத்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடி மேடையை திறந்துவைத்த ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் தேசியக் கொடியேற்றினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன்,ராஜூ,துணைத் தலைவா் அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி கொடியேற்றினாா்.

வா்த்தகா் சங்க அலுவலகத்தில் தலைவா் எஸ்.எஸ்.தென்னரசு கொடியேற்றினா். வணிகா் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தலைவா் திருமலை.செந்தில் கொடியேற்றினாா்.

மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில் வாய்மேடு விக்டரி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கோடியக்கரை விமானப்படை கண்காணிப்பு முகாம், தோப்புத்துறை அல்-நூா் மேல்நிலைப் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், காவல் நிலையங்கள், அனைத்து ஊராட்சி, தலைஞாயிறு பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com