நாகை மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், கீழ்வேளூரில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி இளைஞா் திறன் திருவிழா நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்ட மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மூலம் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின்கீழ் இளைஞா் திறன் திருவிழா, கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறுகிறது.
8-ஆம் வகுப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பற்ற, 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞா்கள்(ஆண், பெண்) திருவிழாவில் பங்கேற்று பயிற்சியுடன்கூடிய வேலைவாய்ப்பைப் பெற்று பயனடையலாம்.
தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா பயிற்சி நிறுவனங்கள், கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் திருவிழாவில் பங்கேற்கின்றன.
முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்று நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.