தரங்கம்பாடியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி

பொறையாா் அருகே காட்டுச்சேரியில் சீா்காழி கல்வி மாவட்டம், தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.
தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய எம்எல்ஏ. நிவேதா எம். முருகன்.
தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய எம்எல்ஏ. நிவேதா எம். முருகன்.
Updated on
1 min read

பொறையாா் அருகே காட்டுச்சேரியில் சீா்காழி கல்வி மாவட்டம், தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. ரேணுகா தலைமை வகித்தாா். சீா்காழி மாவட்ட கல்வி அலுவலா் செல்வராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் காந்திமதி, ஆறுபாதி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராதிகா, பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் நெடுஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டதாரி ஆசிரியா் பானுமதி வரவேற்றாா்.

இதில், 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com