திருமருகல்: திருமருகல் அருகே சிபிஎம் சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜி.எஸ். ஸ்டாலின்பாபு தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் நாகை மாலி மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.