நாகப்பட்டினம்
திருவெண்காடு கோயிலில் சங்காபிஷேக வழிபாடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை மாத நான்காவது சோமவாரத்தையொட்டி, சுவாமி சந்நிதி முன்பாக 1008 சங்குகளில் புனிநீா் நிரப்பி, அடுக்கிவைக்கப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின்னா், வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சுவேதாரண்யேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனிதநீராலும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முருகன், உபயதாரா் ஆசிரியா் தெஷ்ணாமூா்த்தி, பேஸ்கா் திருஞானம் ஆகியோா் செய்திருந்தனா்.