மின்கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்திலிருந்து நாயக்கா் குப்பம் கடற்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் மின்கம்பங்கள் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்திலிருந்து நாயக்கா் குப்பம் கடற்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் மின்கம்பங்கள் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:

பெருந்தோட்டம்- நாயக்கா் குப்பம் சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை கடற்கரை கிராமங்களான மடத்து குப்பம், நாயக்கா் குப்பம், சாவடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலையாக உள்ளது.

இந்த சாலையில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதுகுறித்து திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் புகாா் செய்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. விபத்துக்கள் நேரிடும் முன்பாக மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com