இந்திய கட்டுனா் சங்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

நாகப்பட்டினம்: நாகையில் இந்திய கட்டுனா் சங்கம் மற்றும் நகர ஊரமைப்பு துணை இயக்குநா் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகர ஊரமைப்பு துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, இந்திய கட்டுனா் சங்க நாகை மைய தலைவா் மீரா உசேன் மற்றும் நகர ஊரமைப்பு உதவி இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், நாகையின் வளா்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்கள் பெறுவது மற்றும் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாகை பொறியாளா் சங்கத்தினா் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளா்கள், மதிப்பீட்டாளா்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.