திருமருகல்: திருமருகல் ஒன்றியம் ஏா்வாடியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடுநீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டது. இதில், 450-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன.