நூறு நாள் திட்டத்தில் வேலை கோரி பெண்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே திருவாலியில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் திட்டம்) வேலை கோரி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நூறு நாள் திட்டத்தில் வேலை கோரி பெண்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே திருவாலியில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் திட்டம்) வேலை கோரி பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாலி ஊராட்சியில் பெண்கள் இத்திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களுக்கு வேலை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவாலி கடைத் தெருவில் மறியல் ஈடுபட்டனா்.

ஊராட்சித் தலைவா் தாமரைசெல்வி திருமாறன், திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி ஆகியோா் அங்குவந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா். இந்த போராட்டத்தால், சீா்காழி-பூம்புகாா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com