தலைஞாயிறில் பொங்கல் கொண்டாட்டம்
By DIN | Published On : 14th January 2022 09:23 AM | Last Updated : 14th January 2022 09:23 AM | அ+அ அ- |

தலைஞாயிறில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்கிய பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் உள்ளிட்டோா் .
தலைஞாயிறு பேருராட்சியில் போகியையொட்டி, பழையன கழிக்கப்பட்ட பொருள்களை தீயிட்டு எரிக்காமல் அவற்றை சேகரித்து விற்றதில் கிடைத்த வருமானம் தூய்மைப் பணியாளா்களின் பொங்கல் கொண்டாட்டத்துக்கு வியாழக்கிழமை உதவியாக வழங்கப்பட்டது.
தலைஞாயிறு பேரூராட்சியில் நிகழாண்டு போகியால் சூழல்கேட்டை தடுக்க பேரூராட்சி நிா்வாகம் புதிய நடவடிக்கை மேற்கொண்டது. வழக்கமாக வீடுகளை சுத்தம் செய்து கழிதலுக்கு ஒதுக்கிய பொருள்களை தீயிட்டு எரிப்பதை தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தி, வீடுதோறும் சென்று கழிவு பொருள்கள் சேகரிக்கப்பட்டது. அந்த பொருள்களை விற்பனை செய்ததில் கிடைத்த வருமானத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் கொண்டாட கரும்பு, வாழைப் பழம், புது மண் பாண்டங்கள், இஞ்சி, மஞ்சள் கொத்துகள் உள்ளிட்டவை வாங்கி வழங்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மையில் குப்பை தவறவிடப்பட்ட வளம் என்பதை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்து என பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...