நாகையில் 215, மயிலாடுதுறையில்185 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th January 2022 09:36 AM | Last Updated : 26th January 2022 09:36 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் புதிதாக 215 பேருக்கும், மயிலாடுதுறையில் 185 பேருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,599-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 159 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 1,326- ஆக உள்ளது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 25,136-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 62 போ் வீடு திரும்பினா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 1,043-ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு செவ்வாய்க்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...