நாகை வெளிப்பாளையம் காவலா்கள் குடியிருப்பில் காவலா்கள் குடும்ப விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காவலா்கள் குடும்பங்களிடையே நல்லுறவு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இவ்விழாநடைபெற்றது. காவலா்களின் குழந்தைகளிடையே பேச்சு, ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. காவலா்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ரமேஷ்பாபு, பிலிப் ஏ.கென்னடி, டி. கீதா(பயிற்சி) தனிப்பிரிவு ஆய்வாளா் ராணி, வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.