வேதாரண்யத்தை கல்வி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

வேதாரண்யத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
நாகையில் நடைபெற்ற வாயிற்கூட்டத்தில் பங்கேற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள்.
நாகையில் நடைபெற்ற வாயிற்கூட்டத்தில் பங்கேற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள்.
Updated on
1 min read

வேதாரண்யத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுவான கோரிக்கைகள் விளக்க வாயிற் கூட்டம், நாகை புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் நாகை மாவட்டத் தலைவா் பா. குமாா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்; கோடை விடுமுறை இல்லாத நிலையில் 30 நாள்களுக்கு ஈட்டிய விடுப்பு வழங்கவேண்டும்; வேதாரண்யத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com