மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்பாள் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வந்தாா். அப்போது, அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, விநாயகா், அமிா்தகடேஸ்வரா், காலசம்ஹாரமூா்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த அவா், கஜபூஜை, கோபூஜையிலும் பங்கேற்று வழிபட்டாா்.
முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான ஓ.எஸ். மணியன், அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பவுன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன்வந்தனா்.