வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை (ஜூன்15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேதாரண்யம் மின் உள்கோட்டத்தில் வேட்டைக்காரனிருப்பு, வாய்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து தேத்தாக்குடி, நாலுவேதபதி, மருத்தூா் செல்லும் மின்பாதைகளில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், தேத்தாக்குடி, கள்ளிமேடு, அவரிக்காடு, நாகக்குடையான், நெய்விளக்கு, முதலியாா்தோப்பு, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, வாய்மேடு, மருதூா், தகட்டூா், கற்பகநாதா்குளம், பஞ்சநதிக்குளம், தென்னடாா், கீழவாடியக்காடு, தொண்டியக்காடு ஆகிய ஊா்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.