வேதாரண்யத்தில் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேதாரண்யம் கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் 18 -ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று குறைகளை கூறலாம். இதேபோல, அனைத்துத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை சரிசெய்ய உரிய வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.