பேரிடா் மேலாண்மை பயிற்சி

திருமருகல் அருகேயுள்ள போலகம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குறுவட்ட பொறுப்பாளா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமருகல் அருகேயுள்ள போலகம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குறுவட்ட பொறுப்பாளா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு போலகம் ஊராட்சித் தலைவா் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை வகித்தாா். திருமருகல் வருவாய் ஆய்வாளா் சுந்தா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினா் லதா அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலா் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று பயிற்சியளித்தனா்.

இதேபோல, எரவாஞ்சேரி ஊராட்சி துறையூரில் ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம் தலைமையில் குறுவட்ட பொறுப்பாளா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com