திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மைப் பணி

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணி புதன்கிழமை நடைபெற்றது.

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திக்கா தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். இதில், பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தொடா்ந்து, புதுமனைத் தெருவில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிா்த்து துணிப் பையை பயன்படுத்த விழிப்புணா்வு ஏற்படுத்த மஞ்சப் பை மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, பொதுமக்கள் திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்துக்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னா் திட்டச்சேரி அரசினா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com