கல்லூரி மாணவி காணவில்லை என புகாா்

திட்டச்சேரி அருகே கல்லூரி மாணவி காணவில்லை என காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டச்சேரி அருகே கல்லூரி மாணவி காணவில்லை என காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டச்சேரி அருகே புலவநல்லுாா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகள் காயத்ரி (19). இவா், நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு நா்சிங் படித்து வருகிறாா். இந்நிலையில், வேளாங்கண்ணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தவா் ஜூன் 12-ஆம் தேதி பணிக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரி திட்டச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காயத்ரியை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com