வேதாரண்யம் அருகே நூறுநாள் வேலைத் திட்டத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளா் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மருதூா் தெற்கு, திருவன்காடு பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி நாகம்மாள் (65). இதே பகுதியில் நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். வெயில் கடுமையாக இருந்ததால் மயங்கி விழுந்த நாகம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, ஊரக வளா்ச்சித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.