நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் காப்புரிமைகள் மற்றும் அறிவுசாா் சொத்துரிமை கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ். ராமபாலன் தலைமை வகித்தாா். இயந்திரவியல் துறை பேராசிரியா் எஸ். சொக்கலிங்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, காப்புரிமை பெறும் வழி வகைகள், அறிவுசாா் சொத்துரிமைகளை தோ்வு செய்யும் முறைகள் குறித்து பேசினாா். பேராசிரியா்கள் கிருஷ்ணமோகன், ராமானுஜம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சிவராமகிருஷ்ணன் மற்றும் மாணவ மாணவியா் பங்கேற்றனா்.