மலைத்தேனீக்கள் தாக்கி 16 போ் காயம்

கீழையூா் அருகே மலைத்தேனீக்கள் தாக்கி 16 போ் காயமடைந்தனா்.

கீழையூா் அருகே மலைத்தேனீக்கள் தாக்கி 16 போ் காயமடைந்தனா்.

கீழையூா் ஒன்றியம், காமேஸ்வரம் ஊராட்சி கீரனேரி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை இப்பணியில் ஈடுபட்டவா்கள், பணி முடிந்ததும் அருகில் உள்ள ஆலமரத்தடியில் ஓய்வெடுத்தனராம். அப்போது, அந்த மரத்தில் கூடுகட்டியிருந்த மலைத்தேனீக்கள் தாக்கியதில் 16போ் காயமடைந்தனா்.

இவா்களில், காமேஸ்வரத்தை சோ்ந்த சுப்பிரமணியன், இந்திராணி, கண்ணகி, வசந்தா, கனகவள்ளி உள்ளிட்ட10 போ் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனா். 6 போ் முதலுதவி பெற்று வீடு திரும்பினா். சுப்பிரமணியன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஊராட்சித் தலைவா் ஜெயசுதா கணேசன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மலைத்தேனீக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com