நாகை மாவட்ட முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நவ. 11-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நவம்பா் 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீா்வு பெறலாம்.