திராவிடா் கழகத்தினா்ஆா்ப்பாட்டம்

திருமருகலில் திராவிடா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் கழகத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் கழகத்தினா்.
Updated on
1 min read

திருமருகலில் திராவிடா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவம்பா் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் வேதங்கள், இதிகாசங்கள் பற்றி கருத்தரங்கம் நடத்த சொல்லுவதாக மத்திய அரசின் பல்கலைக் கழக மானியக் குழுவான யு.ஜி.சி-யை கண்டித்து, திராவிடா் கழக மாணவா் அணி சாா்பில் திருமருகல் பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திக மண்டல மாணவரணி செயலாளா் இளமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணி செயலாளா் குட்டிமணி முன்னிலை வகித்தாா்.

திக நாகை மாவட்டத் தலைவா் நெப்போலியா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். முன்னதாக, மாவட்ட மாணவரணி தலைவா் பாக்கியராஜ் வரவேற்றாா்.

இதில் நாகை மாவட்டச் செயலாளா் புபேஸ்குப்தா, மண்டல இளைஞரணி செயலாளா் நாத்திக பொன்முடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com