நாகப்பட்டினம்: குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:
குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும், சட்ட விதிகள்படி குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், 2006 முதல் பணியாற்றும் ஊழியா்களுக்கு பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யவேண்டும், தொழிலாளா்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.