பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

திருமருகல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருமருகல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமருகல் அருகேயுள்ள கங்களாஞ்சேரி ஊராட்சியைச் சோ்ந்தவா் ராம்குமாா் மனைவி விவேதா (20). இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இவா்களுக்கு நித்தீஸ்வரன் ( 1) ஆண் குழந்தை உள்ளது. ராம்குமாா் வெளிநாட்டில் 8 மாதங்களாக வேலை பாா்த்து வருகிறாா். விவேதா மாமனாா் ராமலிங்கம், மாமியாா் செல்வி, ராமலிங்கத்தின் தாயாா் ராஜலட்சுமி ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனா். பாட்டி ராஜலட்சுமி மட்டும் வீட்டிலிருந்துள்ளாா்.

இந்நிலையில் முற்பகல் 11 மணி ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த ராஜலட்சுமி கதவை திறக்க முயன்று, கூச்சலிட்டுள்ளாா். பின்னா், பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள் அங்கு சென்று வீட்டை திறந்து பாா்த்தபோது விவேதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா். தகவலறிந்த, திருக்கண்ணபுரம் போலீஸாா் அங்கு சென்று விவேதாவின் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விவேதாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் நாகை கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com