தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டு முத்து முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 29- ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை நான்காம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்றதும் பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி கோயிலின் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், முத்து முனீஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.