நாகப்பட்டினம்: நாகையை அடுத்த சிக்கல் புதிய ரயில் நிலையம் சாலையில், பழனிவேல் காா்டன் எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவெற்றி விநாயகா் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வரா பூஜைகளுடன் கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, புதன்கிழமை காலை கோபூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா் காலை 9.45 மணிக்கு விமானம் மகாகும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு மூலஸ்தான மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.