தரங்கம்பாடி அருகே மேலையூரில் உள்ள ஸ்ரீசூளிகாம்பாள் சமேத ஸ்ரீஉத்திராபதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தன. தொடா்ந்து, பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.