முத்துகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்கடையூா் அருகே இராதா நல்லூா் தோட்டம் முத்துகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருக்கடையூா் அருகே இராதா நல்லூா் தோட்டம் முத்துகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததை தொடா்ந்து பூா்ணாஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எதுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, முத்துகாளி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com