திருக்கடையூா் அருகே பிள்ளைபெருமாள் நல்லூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சிவன், பெருமாள் இருவரும் ஒரே இடத்தில் காட்சி அளித்து வருகின்றனா். இந்நிலையில், இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. தொடா்ந்து, கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்ற 4 கால பூஜைகள் நிறைவடைந்தன. இதையடுத்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.