நாகையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.
Updated on
1 min read

நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

தஞ்சை மாவட்டம், நாச்சியாா்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் எஸ். சுவாமிநாதன். இவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த செப்.7-ஆம் தேதி அரியலூா் மாவட்டம் தா.பழூா் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில், இச்செயலை கண்டித்து நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டது. இதில், நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி. வைரவநாதன், சங்கச் செயலாளா் ஐ. மனோஜ்கியான், இணைச் செயலாளா் எம். தினேஷ்குமாா், பொருளாளா் ஜி. ஆத்மசேகரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com