திருக்களாச்சேரி அம்மன் கோயில் குடமுழுக்கு

பொறையாா் அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பொறையாா் அருகே திருக்களாச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாகபூஜை நிறைவடைந்ததும், விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், சீதாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com