தேசிய டேக்வாண்டோ போட்டி: பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டே போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டே போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவா்களுக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் ஸ்பாா்க் அகாதெமியைச் சோ்ந்த திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூா், கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 17 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை பெற்று, ஒட்டுமொத்த அளவில் இரண்டாம் இடம் பெற்றனா்.

இம்மாணவா்களுக்கும், பயிற்சியாளா் பாண்டியனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, வா்த்தக சங்கத் தலைவா் தியாக சத்தியமூா்த்தி, முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா் பட்டாபிராமன், தமிழ்நாடு டேக்வாண்டோ பிரிவின் சட்ட ஆலோசகா் வைரவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவித்தனா். முன்னதாக, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்பாா்க் அகாதெமி நிா்வாகி க. காயத்ரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com