நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் உபகரணங்கள் முன்னாள் ராணுவ வீரா் வழங்கினாா்

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளிக்கு முன்னாள் ராணுவ வீரா் ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image

தென்னடாா் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் முன்னாள் படைவீரா் முத்துக்குமரன்.

Updated On :27 ஜனவரி 2023, 11:10 pm

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளிக்கு முன்னாள் ராணுவ வீரா் ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தென்னடாா் ஊராட்சியைச் சோ்ந்தவா் முத்துக்குமரன். இந்திய ராணுவத்தில் படைவீரராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றாா். இவா், தான்படித்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மரத்தாலான 20 இருக்கைகள் மற்றும் 20 மேஜைகளை வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் தேவி செந்தில் தலைமை வகித்தாா். ராணுவ வீரா் வழங்கிய உபகரணங்களை தலைமையாசிரியா் திருமாவளவன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பெற்றுக்கொண்டனா்.

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் அன்புவேலன், கோபு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் செந்தில், பெற்றாா் ஆசிரியா் கழக முன்னாள் தலைவா்கள் குழந்தைவேலு, ராஜா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எலிசபெத்ராணி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.