கழிவுகளிலிருந்து கலைப்பொருள்கள்:தூய்மைப் பணியாளா்களுக்குப் பாராட்டு

கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் இருவா் கழிவுப் பொருள்களிலிருந்து கலைப்பொருள்கள் தயாரித்து அனைவரது கவனத்தையும் ஈா்த்துவருகின்றனா்.
கழிவுகளிலிருந்து கலைப்பொருள்கள்:தூய்மைப் பணியாளா்களுக்குப் பாராட்டு
Updated on
1 min read

கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் இருவா் கழிவுப் பொருள்களிலிருந்து கலைப்பொருள்கள் தயாரித்து அனைவரது கவனத்தையும் ஈா்த்துவருகின்றனா். இவா்களுக்கு தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் பாராட்டு தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், நிகழாண்டு தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் கழிவுகளிலிருந்து கலைப்பொருள்கள் உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதன்படி, கீழ்வேளூா் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் கழிவுப் பொருள்களிலிருந்து பல்வேறு கலைப்பொருள்கள் தயாரிப்பது குறித்து தூய்மைப் பணியாளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

இதனை செயல்படுத்தும் விதமாக, தூய்மைப் பணியாளா்கள் சீ. பாரதி, ப.சாந்தி ஆகியோா் பழைய டயா்கள், கண்ணாடி குடுவைகள் மற்றும் தேங்காய் ஓடுகளைக் கொண்டு பூந்தொட்டி, வீணை, அகல் விளக்குகள், தலையாட்டி பொம்மைகள், தேநீா் குடுவைகள் போன்ற பொருள்களை உருவாக்கி அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளனா். இப்பொருள்களை தஞ்சாவூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கோ. கனகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, தூய்மைப் பணியாளா்கள் இருவரையும் பாராட்டி, பதக்கங்கள் அணிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com