வைகாசி விசாகம்: சிக்கல் சிங்காரவேலவா்கோயிலில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைகாசி விசாகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிக்கல் சிங்காரவேலவா்.
வைகாசி விசாகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிக்கல் சிங்காரவேலவா்.

வைகாசி விசாகத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சிங்காரவேலவருக்கு, திரவிய பொடி, மஞ்சள், இளநீா் , பால், பஞ்சாமிா்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நாகை, காரைக்கால், திருவாரூா் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com