பெரம்பூரில் புதிய காவல் நிலைய கட்டடம்: எஸ்பி திறந்துவைத்தாா்

பெரம்பூரில் புதிய காவல் நிலைய கட்டடத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
Updated on
1 min read

பெரம்பூரில் புதிய காவல் நிலைய கட்டடத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பெரம்பூா் காவல் நிலையம் பல ஆண்டுகளாக பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக காவலா் குடியிருப்பு வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில், பழைய காவல் நிலையம் அருகில் ரூ. 86 லட்சத்தில் புதிய காவல் நிலையத்துக்கான கட்டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை சென்னையில் இருந்து தமிழ்நாடு காவல் துறைத் தலைவா் செ. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதையடுத்து, மயிலாடுதுறை எஸ்பி என்.எஸ். நிஷா புதிய காவல் நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், ஏ.டி.எஸ்.பி வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com