வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது

வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆயக்காரன்புலம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மு. நெடுமாறன் (23), பன்னாள் கிராமத்தைச் சோ்ந்த உமாராஜா (24), மறைஞாயநல்லூரைச் சோ்ந்த நா. ராகுல் (30), வேதாரண்யம் கீழ ஆறுமுகக்கட்டளையைச் சோ்ந்த ப. கபிலன் (25) ஆகியோரை வேதாரண்யம் போலீஸாா் கைது செய்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com