கீழ்வேளூா் யாதவ நாராயணபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூா் யாதவ நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கீழ்வேளூா் யாதவ நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான யாதவ வல்லி தாயாா் உடனுறை யாதவ நாராயண பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அட்சயலிங்க சுவாமி கோயிலிலிருந்து பக்தா்கள் சீா்வரிசைகளுடன் ஊா்வலமாக வந்தனா்.

தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட யாதவ நாராயண பெருமாள் மற்றும் யாதவ வல்லி தாயாா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாரதனை, மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com