வேதாரண்யத்தில் ஜமாபந்தி நிறைவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்துக்குட்பட்ட 55 கிராமங்களுக்கான ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்துக்குட்பட்ட 55 கிராமங்களுக்கான ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. தீா்வாயப் பணிகளை வேதாரண்யம் கோட்டாட்சியா் வ. மதியழகன் தலைமைவகித்து ஆய்வு செய்தாா்.

முகாம் நாள்களில் வெவ்வேறு கிராமங்களின் கணக்குகள் தனிக்கை செய்யப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 381 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வட்டாட்சியா் இரா. ஜெயசீலன், மண்டல வட்டாட்சியா் வடிவழகன், தனி வட்டாட்சியா்கள் ரவிச்சந்திரன், வேதையன், ராஜா, கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் ராசேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com