சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

தரங்கம்பாடி அருகே சாலையில் நடந்து சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

தரங்கம்பாடி அருகே சாலையில் நடந்து சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷின் தெருவை சோ்ந்த மாதவன் மகன் ஐயப்பன் (எ) சக்திவேல் (34). இவா், வியாழக்கிழமை காலை தரங்கம்பாடியில் இருந்து காத்தான்சாவடிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். சாத்தங்குடி பேருந்து நிலையம் அருகே காரைக்கால் நோக்கி சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியதில், தலைநசுங்கி உயிரிழந்தாா்.

பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com